கர்நாடக ருசி - வெ .நீலக்கண்டன் நூலினை டவுன்லோட் செய்ய.
கர்நாடகத்தின் எல்லா இடங்களிலும் ராகிக்களி கிடைக்கிறது. அகன்ற தட்டில், பெரிய களி உருண்டைகளை உருட்டி வைத்து பஸ்ஸாரு என்ற
கீரைச்சாறை ஊற்றித் தருகிறார்கள். அக்கி ரொட்டிக்கும், கேப்பை ரொட்டிக்கும் கியூவில் நிற்கிறார்கள்.
பாண்டவபுரா கோதி அல்வா, சாம்ராஜ்நகர் போண்டா சூப், ஸ்ரீரங்கப்பட்டினம் அக்கிரொட்டி, பெல்காம் குந்தா, மத்தூர் வடை, தாவணகெரே
பென்னாதோசை, மைசூர் பாகு, மங்களூர் கப் இட்லி, கார்வார் பலா இலை இட்லி, பிடதி தட்டே இட்லி, தார்வார் பேடா என கர்நாடகத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு பாரம்பரிய உணவு உண்டு.
நூலாசிரியர் வெ.நீலகண்டன் பற்றி...
தற்போது குங்குமம் வார
இதழின் தலைமை நிருபராக
பணிபுரிந்து வருகிறார்.
இவரது எழுத்துக்களில்...
கிராமத்து வாழ்வியல்,
பண்பாடு, கலாச்சாரம்
குறித்த சிந்தனைகள்
மேலோங்கியிருக்கும்.
‘நாங்களும் சில பூக்களும்,
அய்யா வைகுண்டர்,
ஊர்க்கதைகள்,உறங்காநகரம்,
வெள்ளியங்கிரி யாத்திரை
வாழ்விழந்து வரும்
கிராமிய இசைக் கருவிகள்,
எந்த ஊரில்
என்ன ருசிக்கலாம்?’
ஆகியவை இவர் எழுதியுள்ள
நூல்கள்.
தஞ்சாவூர் மாவட்டம்,
பேராவூரணியை
அடுத்துள்ள முடச்சிக்காடு
இவரது சொந்த ஊர்.
No comments:
Post a Comment