Monetize Your Account... Plz Click Below the Banner

Saturday, 23 July 2016

திருவரங்கன் உலா-ஒரு உண்மை சம்பவம்


திருவரங்கன் உலா-ஒரு உண்மை சம்பவம்






திருவரங்கன் உலா ஒரு உண்மை சம்பவத்தை உள்வாங்கி எழுதப்பட்டது. கதை இதுதான். பதினான்காம் நூற்றாண்டில் (1323 AD) டில்லி சுல்தான் உளுக்கான் (இன்னொரு பெயர் முகமது பின் துக்ளக்) ஒரு பெரிய படையை திரட்டிக்கொண்டு தென்னிந்தியாவிற்கு வருகிறான். ஸ்ரீரங்கத்துக் கோவிலின் சொத்துக்களையும், திருவரங்கன் சிலையையும் (உலோகத்தால் ஆனா உற்சவர் சிலை) திருட வருகிறான். ஸ்ரீரங்கம் வாசிகள், கோவிலில் இருக்கும் தேவதாசிகள், வேதாந்த தேசிகர் (வடகலை ஐய்யங்கார்களின் ஆச்சாரியார்) மற்றும் பிள்ளை லோகாச்சரியார் அனைவரும் திருவரங்கனையும் கோவிலையும் காப்பாற்ற திட்டம் போடுகிறார்கள். தேசிகர், திருவரங்கனின் மூலவர் சிலையை (படுத்துக்கொண்டிருக்கும் ரங்கநாதர்) சுவர் எழுப்பச் சொல்லி மூடிவிடுகிறார். பின், உற்சவர் சிலையை எடுத்துக் கொண்டு, பிள்ளை லோகாச்சாரியார் மற்றும் ஒரு கூட்டத்துடன் சுல்தான் வீரர்கள் கண்களில் படாமல் ஸ்ரீரங்கத்திலிருந்து தப்பிக்கிறார். திருவரங்கன், ஸ்ரீரங்கத்திலிருந்து தொடங்கி அழகர் கோவில், மதுரை, எட்டயபுரம், அழவார் திருநகரி, நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, சத்தியமங்கலம் வரை உலா சென்று பின் சத்தியமங்கலத்தில் தொலைகிறார். பின்னர், இருபது ஆண்டுகள் கழித்துக் கிடைக்கப்பெற்று பத்திரமாக திருப்பதிக்கு செல்கிறார்.

இதற்கிடையில் ஸ்ரீரங்கத்தில், கோவிலைச் சுற்றி உள்ள ஏழு மதில் சுவர்களில் (7 concentric walls) ஸ்ரீரங்கவாசிகள் ஆயுதங்கள் தாங்கி சுல்தான் வீரர்களுடன் போரிட்டு கோவிலைக் காக்க முயல்கிறார்கள். இதில் மொத்தம் பதிமூனாயிரம் ஸ்ரீரங்கவாசிகள் இறக்கிறார்கள். கோவில் தேவதாசிகள் தங்களுக்கு உடலுறவு மூலம் பரவும் நோயை வரவழைத்துக்கொண்டு சுல்தான் வீரர்களுடன் படுத்து அவர்களுக்கு நோயை பரப்புகிறார்கள். திருவரங்கனுக்காக இத்தனை தியாகங்கள் தேவையா? ஸ்ரீரங்கக் காரர்களுக்கு தேவை படுகிறது. இவர்களை பொறுத்தவரை திருவரங்கன் வெறும் பெருமாள் இல்லை. அவர்களுள் ஒருவன். அவர்களுக்கு எல்லாம் திருவரங்கன் ஒரு நாயகன்.

உளுக்கான் படை மெதுவாக வலுவிழக்கிறது. விஜயநகர அரசாங்கம் பலம் பெற்று தென்னிந்தியாவை சுல்தான் ஆதிக்கத்திலிருந்து காப்பாற்றுகிறது. திருவரங்கன், திருப்பதியில் முப்பது ஆண்டுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பின்னர் ஸ்ரீரங்கம் திரும்புகிறார். தேசிகர் மதில் சுவரை இடித்து, திருவரங்கனை மீண்டும் அங்கு நிலை நாட்டுகிறார். விஜய நகர படையெடுப்பும், திருப்பதியிலிருந்து மீண்டு வரும் படலமும் 'மதுரா விஜயம்' நாவலில் அமைந்திருக்கும்.

மற்றொரு உண்மையான சங்கதி. உளுக்கான் படை எடுப்பதற்கு பதிமூன்று ஆண்டுகளுக்கு முன் (1310 AD), மாலிக் கபூர் (Malik Kafur) தலைமையில் ஒரு படை ஸ்ரீரங்கம் வந்து நம்பெருமாளின் சிலையைத்திருடி டில்லிக்கு எடுத்துச்சென்று விட்டார்கள். மாலிக் கபுரின் மகள் சூரத்தானி, நம்பெருமாள் மீது காதல் வயப்பட்டு, சிலையை எடுத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் வந்து, பெருமாளின் சந்நிதி முன் உயிர் துறந்து வைகுண்டம் அடைந்தாள். இன்றும் ஸ்ரீரங்கம் கோவிலில் 'துலுக்க நாச்சியார்' என்று ஒரு சந்நிதி இருக்கிறது. தினமும் அங்கு சப்பாத்தி செய்து அவளுக்கு சார்த்தும் வழக்கத்தை கடைபிடிக்கிறார்கள்.


ஸ்ரீ வேணுகோபாலன் -திருவரங்கன் உலா நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .








No comments:

Post a Comment