Monetize Your Account... Plz Click Below the Banner

Thursday, 7 July 2016

ஆறு சுவையும் அஞ்சறைப்பெட்டியும்-சித்தமருத்துவர் கு.சிவராமன் நூல்


ஆறு சுவையும் அஞ்சறைப்பெட்டியும்-சித்தமருத்துவர் கு.சிவராமன் நூல் 





அஞ்சறைப்பெட்டி, அந்தக் கால மருத்துவ அறிவியல் நம் கலாசாரத்தோடு ஒட்டிவந்ததன் அடையாளம்! உடல் பற்றிய அறிவும், தாக்கும் நோயின் குறிகுணத்தையும் நம் மூத்தவர்கள் தெளிவாக அறிந்து, வரும்முன் காப்பதையும் உணவே மருந்து என உணவில் மெனக்கிடுவதையும் பண்பாடாக தலைமுறைகளுக்குக் கடத்தியிருந்தனர்.
கைப்பக்குவமான உணவைக்கொண்டும், தோட்டத்தில் எளிய செடி, கொடிகளைவைத்தும் அவர்கள் அன்று வைத்தியம் செய்த வித்தை, இன்று உலகெங்கும் பல மருத்துவ மற்றும் அறிவியலாளர்களால் பெரும் வியப்புடன் பார்க்கப்படுகிறது. இந்த நவீன யுகத்தில், இப்படிப்பட்ட அற்புதமான பாரம்பரிய மருத்துவ அறிவு மெள்ள மெள்ள மறைந்து வருகிறது.
அப்படி மறந்து மறைந்துபோன மருத்துவ அறிவை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியே, இந்தத் நூலின் பெருமை .பாரம்பரியத்தின் எச்சமான பாட்டியும், நவீனத்தின் உச்சமாக இருக்கும் பேத்தியும் நடத்தப்போகும் உரையாடலில் உங்களுக்கான மருத்துவத் தேடலும் கட்டாயம் கலந்திருக்கும்.
வாழையடி வாழையாய் வலம் வந்த, மறந்துபோன மருத்துவக் குறிப்புகள் இனி, உங்கள் வாரிசுகளுக்கும் வற்றாத ஆரோக்கியத்தைத் தரும்.









No comments:

Post a Comment